காலத்திற்கு கொடுக்காதே எல்லை. முதுகெலும்பு உள்ளவரை முயற்சி செய்..தொடர் முயற்சி தோற்காது என்பதில் நம்பிக்கை வை...
செவ்வாய், 17 ஏப்ரல், 2012
காதல் கவிதைகள்
என் காதோரம்
நீ தந்த ஒற்றை
மூச்சுக்காற்றில்
என் வாழ் நாள்
முழுமைக்குமான
சுவாசத்தை பெற்றுவிட்டேன்...! **********************************************
என்னை பார்த்ததும்
மறைக்கும்
உன் சிகரெட்டை போலவே
உன்னை பார்க்கும் போதெல்லாம்
நானும் மறைக்கிறேன்
உன் மீதுள்ள ஆசையை.. ! ***************************************************
என்னைப்பற்றி
சொல்லும்
போதெல்லாம்
கண்டிப்பாய்
மறைத்துவிடுகிறேன்
என்னை பற்றி உன்னிடம்..!************************************************
நீ அறிவாயா..?
உன்னை
கடந்து போகும் காற்றில்
மூன்றில் ஒரு பங்கு
என் சுவாசம் என்பதை..!*****************************************************
நியாபகமாய்
கிழிக்கப்பட்ட
பக்கங்களில் எல்லாம்
எப்போதும் போல்
மறதியாய் அமர்ந்திருக்கிறது
உன் நினைவுகள்..!****************************************************
உனக்கு தெரியாது..!
பத்திரமாய் இருந்துக்கொள் என
நீ பிரிகையில்
சொல்லிச் செல்லும்
வார்த்தைகள் தான்
ஒவ்வொரு நாளும்
என்னை பத்திரப்படுத்திக் கொண்டிருக்கிறது என்ற விவரம்..!******************************************************************************************
உன்னை காதலித்து
உருகி உருகி
எழுதிய வார்த்தைகளால்
உச்சபட்சமாய் எனக்கென
மிஞ்சியிருந்தது
அழகாய் மாறியிருந்த
கையெழுத்தும் ..
கவியாய் மாற்றியமைத்த
தலைஎழுத்தும் தான்..!****************************************************************************
நீ தந்த ஒற்றை
மூச்சுக்காற்றில்
என் வாழ் நாள்
முழுமைக்குமான
சுவாசத்தை பெற்றுவிட்டேன்...! ******************************
என்னை பார்த்ததும்
மறைக்கும்
உன் சிகரெட்டை போலவே
உன்னை பார்க்கும் போதெல்லாம்
நானும் மறைக்கிறேன்
உன் மீதுள்ள ஆசையை.. ! ******************************
என்னைப்பற்றி
சொல்லும்
போதெல்லாம்
கண்டிப்பாய்
மறைத்துவிடுகிறேன்
என்னை பற்றி உன்னிடம்..!******************************
நீ அறிவாயா..?
உன்னை
கடந்து போகும் காற்றில்
மூன்றில் ஒரு பங்கு
என் சுவாசம் என்பதை..!******************************
நியாபகமாய்
கிழிக்கப்பட்ட
பக்கங்களில் எல்லாம்
எப்போதும் போல்
மறதியாய் அமர்ந்திருக்கிறது
உன் நினைவுகள்..!******************************
உனக்கு தெரியாது..!
பத்திரமாய் இருந்துக்கொள் என
நீ பிரிகையில்
சொல்லிச் செல்லும்
வார்த்தைகள் தான்
ஒவ்வொரு நாளும்
என்னை பத்திரப்படுத்திக் கொண்டிருக்கிறது என்ற விவரம்..!******************************
உன்னை காதலித்து
உருகி உருகி
எழுதிய வார்த்தைகளால்
உச்சபட்சமாய் எனக்கென
மிஞ்சியிருந்தது
அழகாய் மாறியிருந்த
கையெழுத்தும் ..
கவியாய் மாற்றியமைத்த
தலைஎழுத்தும் தான்..!******************************
இது தான் வாழ்க்கை..!
போராடி வாழ
எண்ணம் மறுத்தது..
போராட்டம் மட்டுமே
எனக்கு வாழ்வா நெஞ்சம் கொதித்தது..
விரக்தியோடு
சாலையில் நடந்தேன்..
உடைந்த பொம்மை ஒன்றை
வீதியில் கண்டெடுத்த குழந்தை..
விண்வெளியில் மிதப்பது போன்று
புன்னகை பூத்தது..
கிடைத்ததை வைத்து
மகிழ்வை தேடு..
எனும் உண்மை
சாலையோரக் குழந்தை
எனக்கு சொன்னது..
முன்பு விட
வேகமாய் நடந்தேன்
அதே வீதியில்...
இப்போது விரக்தி இல்லை என்னில்....
உன்னால் கிடைத்தது இது மட்டும் தான்..!
உனக்காக
உருகி உருகி
எழுதிய வார்த்தைகளால்
உச்சபட்சமாய்
எனக்கென
மிஞ்சிருந்தது
அழகாய் மாறியிருந்த
கையெழுத்தும்
கவியாய் மாற்றியிருந்த
தலைஎழுத்தும் தான்....!
நானாகிப் போன என் காதலன்.!
நானாகிப் போன என் காதலன்.!
நானாகத்தான் சொன்னேன்
என் காதலை ..
வண்டு வரும் வரை இனி
பொறுமை இல்லை மலருக்கு..
என்னை மொய்த்து விடு
தடையேதுமில்லை உனக்கு..
காதலை சொல்லக்கூட
உன் வாய் வார்த்தை
வீணாக வேண்டாம்
என் பெயரை
உச்சரிக்கையில் மட்டும்
வார்த்தைகள் உயிர் பெறட்டும்...
என்னை உரசி போனவர்களில்
உயிரை உலுக்கி போனவன் தானே நீ ..
வயிற்றுக்கு சோறிடும்
வேலை மட்டுமே உனக்கு..
உன் வாழ்க்கைக்கான
அத்தனைக்கும் இனி நானே பொறுப்பு..
அச்சம் நாணம் எல்லாம்
உன் காதலில் அடகு வைத்து
காதல் இச்சை தீர
கல்யாண மேடையில் எதிர் நின்றேன்..
விளக்கேற்ற வந்தேன்
உன் வீடு தேடி ..
இனி விளக்கணைந்த
நேரங்களில் எல்லாம்
என்னோடு நீ வெளிச்சம் தேடு ..
ஒருவனுக்கு ஒருத்தியாய் வந்தேன்..
உனக்குள் என்னை கரைத்துக்கொண்டு
உலகில் நீ
ஒருவனாகவே இருந்துவிடு ..
உன் பிள்ளை
நான் சுமக்க உன்னிடம்
பிள்ளையாகிப்போன
என்னை உன்னில் ஊற்றி
எனக்கும் சேர்த்து
என் பிள்ளைக்கும்
நீயே அன்னையாகி விடு.. ..
திங்கள், 9 ஏப்ரல், 2012
ஒரு காரணத்தை எப்படி வெளியில் சொல்வேன்..!
விழித்தெழும் ஒவ்வொரு
இரவு வேளையிலும்
ஒவ்வொரு கனவு ..
விஷமுள்ள நாகம்
யாரையோ தீண்டுவதாய்.
நரி ஒன்று
ஊருக்குள் ஊளையிடுவதாய்..
குரங்கு ஒன்று
எதையோ பறித்து போவதாய்..
யானை ஒன்று
பயமுறுத்தி துரத்துவதாய்.
நான் கண்ட
ஒவ்வொரு கனவிற்கும்
பயந்தபடியே பல காரணங்களை
சொல்கிறாள் அம்மா..
அத்தனையும் என்
ஒற்றை குணம்
என்பதை நான்
எப்படி வெளியில் சொல்வேன்..?
இரவு வேளையிலும்
ஒவ்வொரு கனவு ..
விஷமுள்ள நாகம்
யாரையோ தீண்டுவதாய்.
நரி ஒன்று
ஊருக்குள் ஊளையிடுவதாய்..
குரங்கு ஒன்று
எதையோ பறித்து போவதாய்..
யானை ஒன்று
பயமுறுத்தி துரத்துவதாய்.
நான் கண்ட
ஒவ்வொரு கனவிற்கும்
பயந்தபடியே பல காரணங்களை
சொல்கிறாள் அம்மா..
அத்தனையும் என்
ஒற்றை குணம்
என்பதை நான்
எப்படி வெளியில் சொல்வேன்..?
பொம்மையோடு கற்ற பாடம்..!
தினமும்
ஏதேதோ பேசுகிறாள்
என் மகள் பொம்மையோடு..
அவள் அயர்ந்த போது
என்ன பேசினாள்
என பொம்மையோடு வினவினேன்..
காட்டிகொடுக்கும் பழக்கம்
எங்கள் குலத்திற்கு இல்லை
என்பது போல் என்னிடம்
மௌனம் மட்டுமே காட்டியது
ஏதேதோ பேசுகிறாள்
என் மகள் பொம்மையோடு..
அவள் அயர்ந்த போது
என்ன பேசினாள்
என பொம்மையோடு வினவினேன்..
காட்டிகொடுக்கும் பழக்கம்
எங்கள் குலத்திற்கு இல்லை
என்பது போல் என்னிடம்
மௌனம் மட்டுமே காட்டியது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)