வியாழன், 20 அக்டோபர், 2011

என் காதலின் உருவம் தான் கணவனோ...!. .

மனதோடு மயக்கிய மணாளனே

மணமேடையில் உன்

கரம் பற்றவே..

நான் மன்றாடிய

கதைகள் ஆயிரம்..!

நீ மட்டுமே வேண்டுமென

அடம் பிடித்து கொண்ட

அறப்போராட்டம்.. !

அத்தனையும் அணு அணுவாய்

நெஞ்சில் சுமக்கிறேன்..

எனை அரவணைக்கும்

உந்தன் மேல்

கொண்ட ஆசை மாறாமல்..!

சிறப்பாய் எல்லாம் செய்தும்

சில நேரம்

சினம் கொள்கிறேன்..

நீ ஆறுதல் சொல்லும்

அழகை காணவே...!

.இன்று உன்னால்

நான் தாய்மை அடைந்த போதும்

நானே உன் சேயாய்.. !

தந்தை என

நீ மாறிய போதும்

என்றும் நீயே என் தாயாய் .. !

எனை நெஞ்சில்

சுமந்து விடு போதும்..!

உனதவளாய் பிறப்பெடுப்பேன்.. ..

ஜென்மங்கள் அனைத்தும்

வல்லமை தாராயோ.....!

உலகத்தின் காதலை

எல்லாம் உள்ளத்தில்

சேமித்தேன் உனக்கென..!

புரியாத மொழியை

எல்லாம் அறிந்து கொண்டேன்

புதுமுறையில் காதலை சொல்வதற்கென...!

ஓளி தருவாய் எனும் நம்பிக்கையில்

வழிப்பாதையில் நிற்கிறேன்....

நீ வருவாய் என.. .!

எல்லாம் சரியாய் செய்தும்

எப்போதும் போல்

எதிரில் நிற்க மலைக்கிறேன்....!

.இன்று வரை

உன் விழிப்பார்வை

எதிர் நோக்கும்

வல்லமை இல்லாமல்.....! .

சோதனை கூடத்தின் எலியானேன்..

வாளினும் வலியதாய்

உன் விழிகள் இருக்கலாம்..

அதனை பரீச்சித்து பார்க்க..

என் இதயம் தானா

கிடைத்தது உனக்கு..

தேனினும் இனியதாய்

உன் வார்த்தைகள் இருக்கலாம்.

கவிதை எழுதி பழக

என் வாழ்க்கை தானா

கிடைத்தது உனக்கு.
.
சோதனைக்கூடத்தின் எலியாய்

என் காதலை சிதைத்து விட்டு

யாரோடு மேடை ஏறினாய்

கல்யாண பட்டம் பெற..

புதன், 19 அக்டோபர், 2011

நடப்பதெல்லாம் உன்னாலே..!

அன்று.. !

நிலவுக்கும் எனக்குமான தூரத்தை

நீ தான் குறைத்தாய்

உன் வருகையால்.. ..!

தொடக்கத்திற்கும்

முடிவிற்குமான என் வாழ்வை

நீ தான் கணக்கிட்டாய்..

உன் காதலால்....!

உணர்வுக்கும் உள்ளத்திற்கும்

புரியாததொரு துடிப்பை கொடுத்தாய்

உன் கண்களால்...!

இன்று..!

என் உடலுக்கும்

உயிருக்குமான தொடர்பை

நீ தான் துண்டிக்கிறாய்..

உன் பிரிவால்.. !


மலருமா அந்த நாட்கள்....?

சிநேகமாய் புன்னகைத்து

உள்ளத்தில் சங்கமமாகிய நாட்கள்..

உனக்கென்ன காத்திருந்து

கைகோர்த்த பழகிய நாட்கள்..

மற்ற நிகழ்வுகள் மறந்து

உன் நினைவோடு

சுற்றி திரிந்த நாட்கள்..

முகம் தூக்கி பார்த்து

பரவசமடைந்த மழை நாட்கள்..

அத்தனை நாளுக்கும்

முற்றுப்புள்ளியாய் அமைந்ததடி..

நம் திருமண நாள் ....

ஏக்கங்கள் வளர ..

நியாபகங்கள் தொடர.

.மீண்டும் மலருமா அந்த நாட்கள்..

செவ்வாய், 18 அக்டோபர், 2011

காதலும் கற்று நட..

 

காதல் கொண்டு

உன் பின்னே அலைவதால்

சாமானியனாய் எண்ணி சாடுகிறாய்..

காவியங்கள் பல

சாமானியனின்

காதலை தான் சுமந்தன

என்பதை மறந்துவிட்டாய் . .

மதம் கண்டு

மனமில்லை என்கிறாய் ..

வண்டுக்கும் பூக்களுக்கும் நடுவே

காற்று தடையில்லை ..

அது போலவே மதமும்..

வார்த்தைகள் தராமல்

சில நேரம்

கடந்து விடுகிறாய்... ....

மௌனத்தை மொழி பெயர்க்க

மனிதர்க்கு கற்று தந்தது

காதல் தான் என்பதை

நீ அறிந்திடவில்லை.. .

கல்யாணத்திற்கு பின் காதல்

என்பது உன் வாதம்..

.நீ கல்லறை போனாலும் கைவிடாது

என்பது காதலின் வேதம்..

இறுதியாய் ஒன்று

. மறித்து விட்ட மனிதத்தை

மலர வைக்கும் காதலை..

.கற்று நட ஒரு முறை .. .

வானளவு வெற்றி குவியும்

இனி எப்போதும் எம்முறை..

கை விட்ட காதல்.....!



அன்று...!

கவிதை பூக்கள் தொடுக்க வைத்து

இன்று கண்ணீர் பூக்களை

பரிசாய் கொடுத்தவளே..

காதல் எனும் அகராதிக்கே

புது களங்கம் கர்ப்பித்தவளே..

எவரும் புரிந்திடா வண்ணம்

காதலை..

புதுமையாய் காய படுத்தியவளே..

உலகையே காக்கும் காதல்..!

என்னை மட்டும் கைவிட்டதே...

ஒரு வார்த்தை...

முன்பே கூறி இருந்தால்

மனமுவந்து தாரை வார்த்திருப்பேனடி

என் உயிரை ..


அதை விடுத்து

எனை உயிரோடு கொல்ல

காதல் எனும் ஆயுதம் தானா கிடைத்தது

உனக்கு.....