காதல் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஜூன், 2013

விழி தீண்டலில் விதைத்தவை ..(பாகம்-4)

மழை பற்றிய கவிதைகள்
எனக்கு பிடிக்கும்..
இப்போதெல்லாம்
மழையைக் கூட பிடிப்பதில்லை
நீ நனைந்து  வருகையில் எல்லாம்..
****************************************************************************
எனக்கும் உனக்குமான
சண்டையிலும் போட்டியிலும்
எப்போதும்  வெல்வது
நம் காதலாகத்தான் இருக்கிறது.
****************************************************************************
என்னை நீ
கட்டிக் கொண்டதற்கு
ஆயிரம் காரணங்கள்
உனக்கு இருந்திருக்கலாம்  ...
நான் உன்னை காதலிப்பது
என்னை நீ கட்டிக் கொண்ட
ஒரு காரணத்திற்காகத்தான் .....
****************************************************************************
என் காதலை சொல்ல
 நான் கவிதையில்
மெனக்கெடும்  போதெல்லாம் ..
கண்ணடித்தே ஆயிரம் கவிதைகளை  சொல்லிவிடுகிறாய்..
****************************************************************************
உன் நிழற்படம் பார்த்து
உன்னை யாரேனும்
காதலிக்க  போகிறார்கள்
என கிண்டல் செய்கிறாய்..
என் நிஜத்தை
நீ வைத்திருக்கும்
தைரியத்தில் தானே..
****************************************************************************

செவ்வாய், 18 ஜூன், 2013

விழி தீண்டலில் விதைத்தவை..(பாகம்-1)

என்ன செய்தாய் என்னை
நீ இல்லாமல்
இருபத்தைந்து வருடம் 
வாழ முடிந்த எனக்கு.
இப்போதெல்லாம் 
ஐந்து நொடிகள் கூட 
வாழ தெரியவில்லையே..
****************************************************************************
என்னை செல்ல பெயர் 
வைத்து அழைத்து அழைத்தே 
என் உண்மை பெயரை 
மறந்தவன் தானே நீ....!
****************************************************************************
வருடங்கள் போன பின்பும் 
உந்தன் காதல் 
இப்படியே இருக்குமா..? 
என கேட்கும்  
என் அப்பாவி கணவா
நீ  அறிவியல் அறிந்ததில்லையா
உயிருள்ளவை எல்லாமே வளரும் என்று ..!
****************************************************************************
"உன்  நினைவுகள்
என் இரத்தத்தில் கலந்துவிட்டது"
என சொன்ன உனக்கு 
எப்படி மனம் வந்தது 
இன்று "இரத்த தானம்" செய்ய....!
***************************************************************************
அலை பேசியில் 
உன்னை அழைக்கையில் 
ஏதோ ஒரு குரல் 
தொடர்பு கொள்ள முடியாது 
என்பதை கேட்டதற்கே
உயிர் ஒரு நிமிடம் 
நின்றுவிட்டு துடிக்கிறதே.. 
****************************************************************************

வெள்ளி, 23 மார்ச், 2012

என்னை போலவே திணருகிறதே..!

உன்னிடம்

கொடுத்துவிட்ட

நிழலை

இனி எப்படி பூமியில்

பிரதிபலிக்க செய்வது

என என்னை போலவே திணருகிறதே

என் மேல் வீசும்

ஒளிகள் எல்லாம்.....

வெள்ளி, 6 ஜனவரி, 2012

மறுமுறையாய் காத்திருக்கிறேன்...!

நீ காயப்படுத்திய
வார்த்தைகளோடு காத்திருக்கிறேன்..

மீண்டும் என் பாதையில்
பயனிப்பாய் என பாத்திருக்கிறேன்..

என் நேசம் அறியும்
முன்பே நெஞ்சம் அறிந்தவள் நீ

அதை கொன்று விட்டு போக
வஞ்சம் நினைத்தது ஏன்..!

துணையாகி போன என் நேசம்
இன்று சுமையாகி போனதேன்..

நலமா என்று தான் ஆரம்பித்தேன்.
பின்னாளில் உன் நலமே
என் வாழ்வானது..

இன்று நீ விட்டு போனதில்
வாழ்வே கேள்விக்குறியானது..!

எனை எட்டி போனதில்
காலங்கள் நகராமல் மூர்ச்சையானது..

ஆயினும்....

மறுமுறையாய் காத்திருக்கிறேன்..
மீண்டும் என் பாதையில் பயனிப்பாய்
என பாத்திருக்கிறேன்..

வியாழன், 3 நவம்பர், 2011

ஆதலினால் காதல் செய்வீர் ..!

நிமிடங்கள் பேசினால் போதும்

வருடத்திற்கும் வேண்டிய

கவி வார்த்தைகள் கிடைக்கும்...!

.நொடி தனில்

நோக்கினால் போதும்

நினைவுகளே மருந்தாய் மாறும்

அதிசய நோய் வந்து நிலைக்கும்..!

பாதையின்றி பயணிக்கும்

கால்களுக்கு பட்டாம் பூச்சியென

பறக்கும் சிறகு முளைக்கும்..!

வாசமின்றி இருக்கும்

இதயப் பூவிற்கு

புது சுவாசம் கண்டு

மலரச் செய்யும்..!

மரித்து விட்ட தேகமாய் இருக்கும்

வாழ்வையும் மகிழ்ச்சி வெள்ளத்தில்

நீந்த செய்யும் ...!

உனக்குள்ளே உரக்க

சிரிக்க வைக்கும்

காதலை பெறுவது சுலபமில்லை..!

பெற்றுவிட்டால். வானம் கூட

தொட்டுவிடும் எல்லை ...!

ஆகையினால் காதல் செய்வீர்...

பிழை ஒன்றும் இல்லை..!