வெள்ளி, 23 மார்ச், 2012

பாட்டியம்மா...

அப்பா அடித்த போதும்
அம்மா கடிந்த போதும்
நான் ஒளிந்து கொண்டது
அவள் மடி தான்....

வெற்றிலை இடித்துக் கொடுக்கவும்
வெளிக்கு கூட்டிக் கொண்டு போகவும் அவளிடம் விலை பேசியவன் நான்..

அன்று

விளையாட்டின் போதும்
விவரம் தெரிந்த போதும்
பெரிதாய் எனக்குள் தோன்றவில்லை..

இன்று வேலை கிடைத்தும்
எல்லாம் கிடைத்துவிட்ட
வாழ்வு அமைந்தும் அவளின் வெறுமை என்னுள் நீங்கவில்லை..

தேடிக்கொண்டிருக்கிறேன்..
அவளை அழைத்து செல்ல மறுத்த கோவிலிலும்
அவள் அடைந்திருந்த
கொல்லையிலும்..

காணவில்லை
படமாகி விட்ட என் பாட்டி

என் கண்ணீரும் தேடுகிறதே..!

அழும் போதெல்லாம்

நெஞ்சோடு சாய்த்து

அரவனைத்தவனை

எட்டி பார்த்து தேடுகிறது

என்னை போலவே

என் கண்ணீரும்..

என்னை போலவே திணருகிறதே..!

உன்னிடம்

கொடுத்துவிட்ட

நிழலை

இனி எப்படி பூமியில்

பிரதிபலிக்க செய்வது

என என்னை போலவே திணருகிறதே

என் மேல் வீசும்

ஒளிகள் எல்லாம்.....

திங்கள், 23 ஜனவரி, 2012

உன்னை விட்டு செல்கிறேன் தூரமாய்..!

ஏதோ ஒரு மழைநாளில்

உன் ஞாபங்களை

கண்ணீரால் தொலைத்த கையோடு

வானம் போலவே வாழ்வை

வெறுமையாய் களிக்கிறேன்..

வாசித்து எழுதுபவருக்கு மத்தியில்

உன்னை யோசித்து

எழுதிய கவிதைகளை

தீக்கிரையாக்கி குளிர்காய்கிறேன்..

எல்லாம் கொடுத்து விட்டேன்..

கொடுக்காமலே வைத்து கொண்டேன்..

கோபம் மட்டும்

கொஞ்சம் கொஞ்சமாய் அதையும்

நீயே களவாடிக் கொள்ள

உன்னை விட்டு செல்கிறேன்..

இன்னும் தூரமாய்....

புள்ள வரம் தாரும்மையா..!

கொல்லையில குளிச்சப்போ
சேலை மறச்சி குளிச்சேன்..

குளத்துல குளிச்சப்போ
கைய மறச்சி குளிச்சேன்..

குற்றாலத்துல குளிச்சப்போ
குதூகலமா குளிச்சேன்..

குளிக்கத்தான் நெஞ்சுக்குள்ள
கோடி ஆசை.

வருஷம் ஒன்னு கூடி போச்சு
ஆனாலும் குளிக்கிறேன்னு
ஊரெல்லாம் கைகொட்டி பேச...

ஊர் பாக்க அப்பன் சொன்னாரு..
ஆத்தா தான் பொறந்திருக்குனு

வளர்ந்தப்போ ஆத்தா சொன்னா
என்ன பெத்தவ நீ தான்னு..

கட்டிகிட்டவர் கட்டில்ல சொன்னாரு
இனி எனக்கு அம்மா நீ தான்னு..

ஊரு மட்டும் சொல்லுது
என்னை மலடின்னு...

பொட்ட புள்ளையா
பொறந்ததுதான் பாவமா..

நான் பெத்தெடுக்க புள்ள இல்ல
சாமி தந்த சாபமா..

புள்ள ஒன்னு தாருமய்யா
நான் வாழுறேன்..

மறுத்துபுட்டா உசுர தான்
தார வாக்குறேன்..!

கதை சொன்ன காலம் மலையேறிப்போச்சு .!

பாட்டி சொன்ன கதையெல்லாம்
பரணுல தான் போட்டாச்சு..

கதை சொன்ன காலமெல்லாம்
கல்வெட்டுல பதிஞ்சாச்சு...

புள்ளைக்கு கதை சொல்ல
நேரத்தை தான் தொலைச்சாச்சு...

வளக்குற பொறுப்பத்தான்
டிவி பொட்டிகிட்டே விட்டாச்சு.. !

வெள்ளி, 6 ஜனவரி, 2012

மடி தருவாயோ மகளே .. .!

கார்த்திகை மாத குளிரில்
வெண் பனியாய் நான் சிந்தியதை
வெள்ளி நிலவானவள் கவிதையாக்கி தந்தாள்..

மயக்க நிலையிலே அவள்
விழி மூடி இருக்க
மடி தேடிய கன்றாய்
மகள் அழு குரல் கேட்க..

பால் குடுக்க மாரு தான்
எனக்கு இல்லையேனு
மனசுக்குள் தவித்தேனே.. ..

மாதம் தான் மெல்ல ஓட
மானாட்டாம் தத்தி தாவ
தங்க விலையாட்டம் வளர்ந்தாலே..

இடக்கையால் அவள் கிறுக்கையிலே
அப்பனாட்டம் பொறந்துருக்குனு
பெற்றவள் சொல்லிப் போக
கண்ணடிதுக்காட்டி கௌரவ
விருது கொடுப்பாளே..

முத்தம் கேட்டு நான் கெஞ்ச
முடியாதுன்னு முகத்தில்
அவ எச்சில் துப்ப
மொத்தமும் கிடைத்ததுபோல்
சொக்கித்தான் நிற்பேனே.. ..

ஆசையாய் அவ உள்ளங்கைய
என் கன்னத்துல வைக்கும் போது
அழுதுகிட்டே அறைவாளே..

நெஞ்சமெல்லாம் நிறைந்த பின்னும்
இன்னும் கொஞ்சம் கேட்குமே
மறுமுறையாய் அடி வாங்க..

கோடியாய் வச்சிருந்த பாசத்தை
கொட்டி தீர்க்க மகளாய் வந்தாளே....

சீதனம் தான் சேர்த்து வைத்து
துணை கண்டு அனுப்புகையில்
காணாத கண்ணீர் தான்
கன்னத்துல நிக்குமே..

நான் எடுத்த பிறவியை
நிரப்ப வந்த உன் வரவை
விதி முடிந்து போகையிலே
மடி தந்து சுமந்தா போதுமே....!