செவ்வாய், 17 ஏப்ரல், 2012

உன்னால் கிடைத்தது இது மட்டும் தான்..!

 

உனக்காக
உருகி உருகி
எழுதிய வார்த்தைகளால்
உச்சபட்சமாய்
எனக்கென
மிஞ்சிருந்தது
அழகாய் மாறியிருந்த
கையெழுத்தும்
கவியாய் மாற்றியிருந்த
தலைஎழுத்தும் தான்....!

நானாகிப் போன என் காதலன்.!

நானாகிப் போன என் காதலன்.! 

நானாகத்தான் சொன்னேன்
என் காதலை ..

வண்டு வரும் வரை இனி
பொறுமை இல்லை மலருக்கு..

என்னை மொய்த்து விடு
தடையேதுமில்லை உனக்கு..

காதலை சொல்லக்கூட
உன் வாய் வார்த்தை
வீணாக வேண்டாம்
என் பெயரை
உச்சரிக்கையில் மட்டும்
வார்த்தைகள் உயிர் பெறட்டும்...

என்னை உரசி போனவர்களில்
உயிரை உலுக்கி போனவன் தானே நீ ..

வயிற்றுக்கு சோறிடும்
வேலை மட்டுமே உனக்கு..

உன் வாழ்க்கைக்கான
அத்தனைக்கும் இனி நானே பொறுப்பு..

அச்சம் நாணம் எல்லாம்
உன் காதலில் அடகு வைத்து
காதல் இச்சை தீர
கல்யாண மேடையில் எதிர் நின்றேன்..

விளக்கேற்ற வந்தேன்
உன் வீடு தேடி ..
இனி விளக்கணைந்த
நேரங்களில் எல்லாம்
என்னோடு நீ வெளிச்சம் தேடு ..

ஒருவனுக்கு ஒருத்தியாய் வந்தேன்..
உனக்குள் என்னை கரைத்துக்கொண்டு
உலகில் நீ
ஒருவனாகவே இருந்துவிடு ..

உன் பிள்ளை
நான் சுமக்க உன்னிடம்
பிள்ளையாகிப்போன
என்னை உன்னில் ஊற்றி
எனக்கும் சேர்த்து
என் பிள்ளைக்கும்
நீயே அன்னையாகி விடு.. ..

திங்கள், 9 ஏப்ரல், 2012

ஒரு காரணத்தை எப்படி வெளியில் சொல்வேன்..!

விழித்தெழும் ஒவ்வொரு
இரவு வேளையிலும்
ஒவ்வொரு கனவு ..

விஷமுள்ள நாகம்
யாரையோ தீண்டுவதாய்.

நரி ஒன்று
ஊருக்குள் ஊளையிடுவதாய்..

குரங்கு ஒன்று
எதையோ பறித்து போவதாய்..

யானை ஒன்று
பயமுறுத்தி துரத்துவதாய்.

நான் கண்ட
ஒவ்வொரு கனவிற்கும்
பயந்தபடியே பல காரணங்களை
சொல்கிறாள் அம்மா..

அத்தனையும் என்
ஒற்றை குணம்
என்பதை நான்
எப்படி வெளியில் சொல்வேன்..?

பொம்மையோடு கற்ற பாடம்..!

தினமும்
ஏதேதோ பேசுகிறாள்
என் மகள் பொம்மையோடு..

அவள் அயர்ந்த போது
என்ன பேசினாள்
என பொம்மையோடு வினவினேன்..

காட்டிகொடுக்கும் பழக்கம்
எங்கள் குலத்திற்கு இல்லை
என்பது போல் என்னிடம்
மௌனம் மட்டுமே காட்டியது

வெள்ளி, 23 மார்ச், 2012

பாட்டியம்மா...

அப்பா அடித்த போதும்
அம்மா கடிந்த போதும்
நான் ஒளிந்து கொண்டது
அவள் மடி தான்....

வெற்றிலை இடித்துக் கொடுக்கவும்
வெளிக்கு கூட்டிக் கொண்டு போகவும் அவளிடம் விலை பேசியவன் நான்..

அன்று

விளையாட்டின் போதும்
விவரம் தெரிந்த போதும்
பெரிதாய் எனக்குள் தோன்றவில்லை..

இன்று வேலை கிடைத்தும்
எல்லாம் கிடைத்துவிட்ட
வாழ்வு அமைந்தும் அவளின் வெறுமை என்னுள் நீங்கவில்லை..

தேடிக்கொண்டிருக்கிறேன்..
அவளை அழைத்து செல்ல மறுத்த கோவிலிலும்
அவள் அடைந்திருந்த
கொல்லையிலும்..

காணவில்லை
படமாகி விட்ட என் பாட்டி

என் கண்ணீரும் தேடுகிறதே..!

அழும் போதெல்லாம்

நெஞ்சோடு சாய்த்து

அரவனைத்தவனை

எட்டி பார்த்து தேடுகிறது

என்னை போலவே

என் கண்ணீரும்..

என்னை போலவே திணருகிறதே..!

உன்னிடம்

கொடுத்துவிட்ட

நிழலை

இனி எப்படி பூமியில்

பிரதிபலிக்க செய்வது

என என்னை போலவே திணருகிறதே

என் மேல் வீசும்

ஒளிகள் எல்லாம்.....