வெள்ளி, 23 மார்ச், 2012

பாட்டியம்மா...

அப்பா அடித்த போதும்
அம்மா கடிந்த போதும்
நான் ஒளிந்து கொண்டது
அவள் மடி தான்....

வெற்றிலை இடித்துக் கொடுக்கவும்
வெளிக்கு கூட்டிக் கொண்டு போகவும் அவளிடம் விலை பேசியவன் நான்..

அன்று

விளையாட்டின் போதும்
விவரம் தெரிந்த போதும்
பெரிதாய் எனக்குள் தோன்றவில்லை..

இன்று வேலை கிடைத்தும்
எல்லாம் கிடைத்துவிட்ட
வாழ்வு அமைந்தும் அவளின் வெறுமை என்னுள் நீங்கவில்லை..

தேடிக்கொண்டிருக்கிறேன்..
அவளை அழைத்து செல்ல மறுத்த கோவிலிலும்
அவள் அடைந்திருந்த
கொல்லையிலும்..

காணவில்லை
படமாகி விட்ட என் பாட்டி

என் கண்ணீரும் தேடுகிறதே..!

அழும் போதெல்லாம்

நெஞ்சோடு சாய்த்து

அரவனைத்தவனை

எட்டி பார்த்து தேடுகிறது

என்னை போலவே

என் கண்ணீரும்..

என்னை போலவே திணருகிறதே..!

உன்னிடம்

கொடுத்துவிட்ட

நிழலை

இனி எப்படி பூமியில்

பிரதிபலிக்க செய்வது

என என்னை போலவே திணருகிறதே

என் மேல் வீசும்

ஒளிகள் எல்லாம்.....