சனி, 21 ஏப்ரல், 2012

தாலி கட்ட வருவானோ மகராசன்..!

 துணிவில்லா பயலுக்கு
கழுத்து நீட்டி..
கரை சேர்த்தாலே
என்னை ஒருத்தி..

பொறந்தப்போ தெரியலையே.
என் பொழப்பு சிரிக்கும்னு.. .

தாலி தான பொண்ணுக்கு வேலி
கொண்டாந்தது கட்டிட
எனக்கு ஏது நாதி..

காசு பணம் குடுக்காத சாமி..
ஆச மட்டும் அள்ளித் தந்தானே பாவி .

இடிச்சிட்டு போறவனுக்கு கூட..
என் கைய புடிச்சிட்டு
போக தோணலியே ..

தெரு விளக்கா என் கத
ஆகும் முன்னே..
தேர் கொண்டு
வருவானோ மகராசன் ..

பருவம் கூட ஆசை தந்தும்
பாதை மாறி போகலையே..

மாலை மாத்த மாமன் வந்தா
பாதம் தொட்டு வாழுறேன்..

பட்டினியா கிடந்துக்கிறேன்
முடிஞ்சவரை ..
பத்தினியா தான் வாழுவேன்
என் உசுருள்ளவரை

2 கருத்துகள்:

  1. பட்டினியா கிடந்துக்கிறேன்
    முடிஞ்சவரை ..
    பத்தினியா தான் வாழுவேன்
    என் உசுருள்ளவரை

    நல்லாருக்கு...நல்லாருக்கு...அடுத்த வீட்டு அக்கா அழுது கொண்டே அம்மா கிட்ட சொன்ன நாட்கள் இந்த வரிகள்..ஞாபகப்படுத்துகிறது

    பதிலளிநீக்கு
  2. பட்டினியா கிடந்துக்கிறேன்
    முடிஞ்சவரை ..
    பத்தினியா தான் வாழுவேன்
    என் உசுருள்ளவரை.. touching

    பதிலளிநீக்கு