செவ்வாய், 17 ஏப்ரல், 2012

இது தான் வாழ்க்கை..!

 

போராடி வாழ
எண்ணம் மறுத்தது..

போராட்டம் மட்டுமே
எனக்கு வாழ்வா நெஞ்சம் கொதித்தது..

விரக்தியோடு
சாலையில் நடந்தேன்..

உடைந்த பொம்மை ஒன்றை
வீதியில் கண்டெடுத்த குழந்தை..

விண்வெளியில் மிதப்பது போன்று
புன்னகை பூத்தது..

கிடைத்ததை வைத்து
மகிழ்வை தேடு..

எனும் உண்மை
சாலையோரக் குழந்தை
எனக்கு சொன்னது..

முன்பு விட
வேகமாய் நடந்தேன்
அதே வீதியில்...
இப்போது விரக்தி இல்லை என்னில்....

1 கருத்து: