சனி, 29 ஜூன், 2013

விழி தீண்டலில் விதைத்தவை ..(பாகம்-4)

மழை பற்றிய கவிதைகள்
எனக்கு பிடிக்கும்..
இப்போதெல்லாம்
மழையைக் கூட பிடிப்பதில்லை
நீ நனைந்து  வருகையில் எல்லாம்..
****************************************************************************
எனக்கும் உனக்குமான
சண்டையிலும் போட்டியிலும்
எப்போதும்  வெல்வது
நம் காதலாகத்தான் இருக்கிறது.
****************************************************************************
என்னை நீ
கட்டிக் கொண்டதற்கு
ஆயிரம் காரணங்கள்
உனக்கு இருந்திருக்கலாம்  ...
நான் உன்னை காதலிப்பது
என்னை நீ கட்டிக் கொண்ட
ஒரு காரணத்திற்காகத்தான் .....
****************************************************************************
என் காதலை சொல்ல
 நான் கவிதையில்
மெனக்கெடும்  போதெல்லாம் ..
கண்ணடித்தே ஆயிரம் கவிதைகளை  சொல்லிவிடுகிறாய்..
****************************************************************************
உன் நிழற்படம் பார்த்து
உன்னை யாரேனும்
காதலிக்க  போகிறார்கள்
என கிண்டல் செய்கிறாய்..
என் நிஜத்தை
நீ வைத்திருக்கும்
தைரியத்தில் தானே..
****************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக