உனக்கும் எனக்குமான
இடைவெளியை இன்றுவரை
காதல் நிரப்பிக் கொண்டிருக்க...!
ஞாபகங்கள் சிறகு முளைத்து
என் உயிர் வானை
அளந்து கொண்டிருக்க...!
தெரியாமல் நான்
நழுவ விட்ட கணங்களையும்...
தெரிந்தே என்னை
தவறவிட்ட ரணங்களையும்...
காலங் கடந்தும்
நினைத்து கதறுகிறேன்...
கணத்த இதயத்தோடும்.. ..
கல்லறை சுகம் தேடி
பயணப்படுகிறேன்..
வெற்றிடமாகி விட்ட வாழ்வோடும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக