வியாழன், 20 அக்டோபர், 2011

என் காதலின் உருவம் தான் கணவனோ...!. .

மனதோடு மயக்கிய மணாளனே

மணமேடையில் உன்

கரம் பற்றவே..

நான் மன்றாடிய

கதைகள் ஆயிரம்..!

நீ மட்டுமே வேண்டுமென

அடம் பிடித்து கொண்ட

அறப்போராட்டம்.. !

அத்தனையும் அணு அணுவாய்

நெஞ்சில் சுமக்கிறேன்..

எனை அரவணைக்கும்

உந்தன் மேல்

கொண்ட ஆசை மாறாமல்..!

சிறப்பாய் எல்லாம் செய்தும்

சில நேரம்

சினம் கொள்கிறேன்..

நீ ஆறுதல் சொல்லும்

அழகை காணவே...!

.இன்று உன்னால்

நான் தாய்மை அடைந்த போதும்

நானே உன் சேயாய்.. !

தந்தை என

நீ மாறிய போதும்

என்றும் நீயே என் தாயாய் .. !

எனை நெஞ்சில்

சுமந்து விடு போதும்..!

உனதவளாய் பிறப்பெடுப்பேன்.. ..

ஜென்மங்கள் அனைத்தும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக