வெள்ளி, 23 மார்ச், 2012

பாட்டியம்மா...

அப்பா அடித்த போதும்
அம்மா கடிந்த போதும்
நான் ஒளிந்து கொண்டது
அவள் மடி தான்....

வெற்றிலை இடித்துக் கொடுக்கவும்
வெளிக்கு கூட்டிக் கொண்டு போகவும் அவளிடம் விலை பேசியவன் நான்..

அன்று

விளையாட்டின் போதும்
விவரம் தெரிந்த போதும்
பெரிதாய் எனக்குள் தோன்றவில்லை..

இன்று வேலை கிடைத்தும்
எல்லாம் கிடைத்துவிட்ட
வாழ்வு அமைந்தும் அவளின் வெறுமை என்னுள் நீங்கவில்லை..

தேடிக்கொண்டிருக்கிறேன்..
அவளை அழைத்து செல்ல மறுத்த கோவிலிலும்
அவள் அடைந்திருந்த
கொல்லையிலும்..

காணவில்லை
படமாகி விட்ட என் பாட்டி

5 கருத்துகள்:

  1. arumai thozhi.. vazhthukaal.. enathu blog address www.cdkeyan.blogspot.in...

    பதிலளிநீக்கு
  2. தேடல்..

    நிமிடங்களில் தொலைத்ததை...
    நாட்களாக தேடிக்கொண்டிருப்பது...

    பதிலளிநீக்கு
  3. இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_20.html#comment-form

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு