புதன், 19 ஜூன், 2013

விழி தீண்டலில் விதைத்தவை ..(பாகம்-2)

என் அழைப்புகளை
 நீ நிராகரிக்கும் போதெல்லாம்
எனக்கு கோபம் வருவது
என்னவோ அலைபேசியை
கண்டுபிடித்தவன் மீதுதான்..
****************************************************************************
எப்படி வேண்டுமானாலும்
என்னிடம் சண்டை இடு..!
சமாதானமாய் மட்டும்
இன்னும் வேண்டும்
என்ற அளவிற்கு மட்டும்
முத்தங்களை கொடுக்க பழகிக் கொள்..!
****************************************************************************
மழைக் காலங்களில்
நீ மறந்து விட்டு போன
குடையோடு சண்டையிட்டே
நீ வரும் வரை
என் நேரங்களை கழிக்கிறேன்....
****************************************************************************
காலையில் எழும் போதே
மனம்  தேட ஆரம்பிக்கிறது
உன் வரவை எதிர்பார்க்கும்
மாலை பொழுதை..
****************************************************************************
ஒன்றன் பின்
ஒன்றாய் எழுதினால்
அது தானே கவிதை
என கிண்டல் செய்யும் போக்கிரி
உன்னை தான்
கவிதையாக்கி  கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு  நாளும்..
****************************************************************************

1 கருத்து: