அம்மா அடித்த போதும்
அப்பா கடிந்த போதும்
தஞ்சம் புகுந்தது
திண்ணையின் மடிகளில் தான்..
விடுமுறை நாட்களில் எல்லாம்
எங்களை வளர்த்து விட்ட திண்ணைகள்
வருவோர் போவோர்க்கெல்லாம்
விருந்தினர் மாளிகையாய்..
விருந்தினர்க்கோ
இளைப்பாறும் மண்டபமாய்..
காத்து கிடந்த திண்ணைகள்..
இன்று கட்டிட
வரைபடங்களில் கூட
காணமுடிவதில்லை .
.
தொலைக்காட்சி தொடர்களினால்
தன் வீட்டு அன்னையையும்
எதிர் வீட்டு அத்தையையும்
பக்கத்து வீட்டு பாட்டியையும்
அடுத்த வீட்டு அக்காவையும்
தொலைத்துவிட்டு
தனியாய் தவிப்போடு கிடக்கின்றது
எஞ்சிருக்கும் அத்தனை திண்ணைகளும் ....
அப்பா கடிந்த போதும்
தஞ்சம் புகுந்தது
திண்ணையின் மடிகளில் தான்..
விடுமுறை நாட்களில் எல்லாம்
எங்களை வளர்த்து விட்ட திண்ணைகள்
வருவோர் போவோர்க்கெல்லாம்
விருந்தினர் மாளிகையாய்..
விருந்தினர்க்கோ
இளைப்பாறும் மண்டபமாய்..
காத்து கிடந்த திண்ணைகள்..
இன்று கட்டிட
வரைபடங்களில் கூட
காணமுடிவதில்லை .
.
தொலைக்காட்சி தொடர்களினால்
தன் வீட்டு அன்னையையும்
எதிர் வீட்டு அத்தையையும்
பக்கத்து வீட்டு பாட்டியையும்
அடுத்த வீட்டு அக்காவையும்
தொலைத்துவிட்டு
தனியாய் தவிப்போடு கிடக்கின்றது
எஞ்சிருக்கும் அத்தனை திண்ணைகளும் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக