புதன், 19 ஜூன், 2013

விழி தீண்டலில் விதைத்தவை.. (பாகம்-3)

அதென்னவோ
 நீ  என்னை விட்டு
விலகி இருக்கும்
நேரங்களில் தான் தெரிகிறது
எனக்கு உன் மீதான காதல்..
****************************************************************************
உன்னை பார்ப்பதற்கு   முன்
எனக்கு காதல் தெரியாது...!
இன்று காதலுக்கு...
வேறு யாரையும் தெரியாது
உன்னோடு  செலவழிக்கவே
உலக காதல் அத்தனையும்
நான் மட்டுமே வாங்கி  கொண்டேன் ...!
****************************************************************************
நீ காதலை சொல்லி
நிராகரித்தவளை
கோவிலில் தற்செயலாய்
ஒருமுறை காட்டினாய்.
என் கண்களுக்கு என்னவோ
அவள் கடவுளாய் தெரிந்தாள்...
****************************************************************************என் முந்தானையில்
தலை துவட்டிக்  கொள்ளவே
மழையில் நனைந்து வரும்
திருடன் தானே நீ..!. .
****************************************************************************
எனக்கு வந்த
காதல் கடிதங்களை
முதல் இரவில்
உன்னிடம் காட்டிய  பொழுது
இப்படியா சந்தேகித்து
 கேள்வி கேட்பாய்
"என்னையாவது காதலிப்பாயா என.."
****************************************************************************

1 கருத்து:

  1. இந்த இனிய காதல் கவிதைகள் யாரையோ குறிவைத்து எழுதப்பட்டதுபோல் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு