வெள்ளி, 6 ஜனவரி, 2012

எப்படி முடிகிறது உன் போன்ற சிலரால் ..

புதைக்கப்பட்ட வரலாற்று காதல் தோல்விகள்
உன் போன்றவர்களால் இன்னும்
விதைக்க படுவதேன்..

உன்னால் எனக்குள் வளர்க்கப் பட்ட
நேசம் வேர் கூட மிச்சமின்றி
பறிக்க பட்டதேன்..

விழியிடம் தோற்று வாங்கிய காதலை வலியோடு நினைந்து வாழ்வை
தொலைக்கத் தானா..

அன்று சொல்வதற்கு
தயங்கிய காதலை தான்
இன்று யாரிடமும்
சொல்ல முடியா ரணமானதேன்.

. நியாபகங்கள் சிறகு முளைப்பதை
தடுக்க முடியவில்லை..

உன் சிந்தனையை மனதிற்க்கோ
மறக்க தெரியவில்லை..

உன்னால் மட்டும் எல்லாம் முடிகின்றது..

பொய்மையை பூச்சூடி கொண்டதாளா..

கொன்று விட துடிக்கும்
கோபங்களைக் கூட
மிஞ்சுகிற நேசத்தை
எப்படி மறக்க முடிகின்றது..

உன் போன்ற சிலரால்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக