வெள்ளி, 6 ஜனவரி, 2012

மறுமுறையாய் காத்திருக்கிறேன்...!

நீ காயப்படுத்திய
வார்த்தைகளோடு காத்திருக்கிறேன்..

மீண்டும் என் பாதையில்
பயனிப்பாய் என பாத்திருக்கிறேன்..

என் நேசம் அறியும்
முன்பே நெஞ்சம் அறிந்தவள் நீ

அதை கொன்று விட்டு போக
வஞ்சம் நினைத்தது ஏன்..!

துணையாகி போன என் நேசம்
இன்று சுமையாகி போனதேன்..

நலமா என்று தான் ஆரம்பித்தேன்.
பின்னாளில் உன் நலமே
என் வாழ்வானது..

இன்று நீ விட்டு போனதில்
வாழ்வே கேள்விக்குறியானது..!

எனை எட்டி போனதில்
காலங்கள் நகராமல் மூர்ச்சையானது..

ஆயினும்....

மறுமுறையாய் காத்திருக்கிறேன்..
மீண்டும் என் பாதையில் பயனிப்பாய்
என பாத்திருக்கிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக