திங்கள், 23 ஜனவரி, 2012

புள்ள வரம் தாரும்மையா..!

கொல்லையில குளிச்சப்போ
சேலை மறச்சி குளிச்சேன்..

குளத்துல குளிச்சப்போ
கைய மறச்சி குளிச்சேன்..

குற்றாலத்துல குளிச்சப்போ
குதூகலமா குளிச்சேன்..

குளிக்கத்தான் நெஞ்சுக்குள்ள
கோடி ஆசை.

வருஷம் ஒன்னு கூடி போச்சு
ஆனாலும் குளிக்கிறேன்னு
ஊரெல்லாம் கைகொட்டி பேச...

ஊர் பாக்க அப்பன் சொன்னாரு..
ஆத்தா தான் பொறந்திருக்குனு

வளர்ந்தப்போ ஆத்தா சொன்னா
என்ன பெத்தவ நீ தான்னு..

கட்டிகிட்டவர் கட்டில்ல சொன்னாரு
இனி எனக்கு அம்மா நீ தான்னு..

ஊரு மட்டும் சொல்லுது
என்னை மலடின்னு...

பொட்ட புள்ளையா
பொறந்ததுதான் பாவமா..

நான் பெத்தெடுக்க புள்ள இல்ல
சாமி தந்த சாபமா..

புள்ள ஒன்னு தாருமய்யா
நான் வாழுறேன்..

மறுத்துபுட்டா உசுர தான்
தார வாக்குறேன்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக