சனி, 21 ஏப்ரல், 2012

புரிந்துக்கொண்டேன் காதல் இன்னதென்று..!

சொல்லாமலே நிற்கிறேன்
உன் நிழல் முன்பு..

கொல்லாமலே சாகிறேன்
உன் விழி கண்டு..

கல்லாமலே எழுதினேன்
கவி ஒன்று..

தீராத நோய் தானோ திணறினேன்
எனக்குள் வந்ததென்று ..

காற்றைக்கூட கண்டறிகிறேன்
உன்னால் இன்று..

கண் பார்த்து சொல்ல
வார்த்தை மூன்று ..

முடியாமலே தோற்றுப் புரிந்தேன்
காதல் இன்னதென்று..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக