செவ்வாய், 17 ஏப்ரல், 2012

வேண்டுமோ உன் காதல் எனக்கு..!

 

அழகாய்த்தான் தெரிந்ததாய்
அலை பாய்ந்த என் மனதிற்கு..

கிள்ளித் தருவாய் என
நினைத்த வேளைகளில்
கவிதைகளை அள்ளித் தந்தாய்..

வாழ்த்த வந்தவர் என
நினைத்த நேரத்தில்
வார்த்தைகளால் வீழ்த்த முயல்கிறாய்..

சங்கீதம் சொன்ன உன் விழிகளில்
சந்தேகம் குடிக் கொள்ள
சம்மதமின்றியே கோபமெனும்
சாத்தானை என் மீது ஏவினாய்..

உலக கவினற்கெல்லாம்
கனவுகள் தான் அவர்தம் சிறகுகள்..
அதுகூட உன் கைப்பிடியில்
அடக்க நினைக்கிறாய்..

சொந்தமாய் கவிநனை கேட்கிறாய்..
கனவுகளையும் அல்லவா சேர்த்து
பறிக்கத் துடிக்கிறாய்..

உலகத்தையே உறவாய் நினைக்கும்
எனக்கு உனதுறவில்
உலகம் பூட்ட நினைக்கிறாய்..

உன்னை இழப்பதால்
இன்று
இதயம் வெற்றிடமாகலாம்..

நாளை
அந்த வானமோ
எந்தன் வசமாகும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக