செவ்வாய், 17 ஏப்ரல், 2012

காதல் கவிதைகள்

என் காதோரம்
நீ தந்த ஒற்றை
மூச்சுக்காற்றில்
என் வாழ் நாள்
முழுமைக்குமான
சுவாசத்தை பெற்றுவிட்டேன்...!
 **********************************************

என்னை பார்த்ததும்
மறைக்கும்
உன் சிகரெட்டை போலவே
உன்னை பார்க்கும் போதெல்லாம்
நானும் மறைக்கிறேன்
உன் மீதுள்ள ஆசையை.. !
 ***************************************************

என்னைப்பற்றி
சொல்லும்
போதெல்லாம்
கண்டிப்பாய்
மறைத்துவிடுகிறேன்
என்னை பற்றி உன்னிடம்..!
************************************************

நீ அறிவாயா..?
உன்னை
கடந்து போகும் காற்றில்
மூன்றில் ஒரு பங்கு
என் சுவாசம் என்பதை..!
*****************************************************

நியாபகமாய்
கிழிக்கப்பட்ட
பக்கங்களில் எல்லாம்
எப்போதும்  போல்
மறதியாய் அமர்ந்திருக்கிறது
உன் நினைவுகள்..!
****************************************************

உனக்கு தெரியாது..!
பத்திரமாய் இருந்துக்கொள் என
நீ பிரிகையில்
சொல்லிச் செல்லும்
வார்த்தைகள் தான்
ஒவ்வொரு  நாளும்
என்னை பத்திரப்படுத்திக் கொண்டிருக்கிறது  என்ற விவரம்..!
******************************************************************************************

உன்னை காதலித்து
உருகி  உருகி
எழுதிய வார்த்தைகளால்
உச்சபட்சமாய் எனக்கென
மிஞ்சியிருந்தது
அழகாய் மாறியிருந்த
கையெழுத்தும் ..
கவியாய்  மாற்றியமைத்த
தலைஎழுத்தும் தான்..!
****************************************************************************

1 கருத்து: