என் காதோரம்
நீ தந்த ஒற்றை
மூச்சுக்காற்றில்
என் வாழ் நாள்
முழுமைக்குமான
சுவாசத்தை பெற்றுவிட்டேன்...! **********************************************
என்னை பார்த்ததும்
மறைக்கும்
உன் சிகரெட்டை போலவே
உன்னை பார்க்கும் போதெல்லாம்
நானும் மறைக்கிறேன்
உன் மீதுள்ள ஆசையை.. ! ***************************************************
என்னைப்பற்றி
சொல்லும்
போதெல்லாம்
கண்டிப்பாய்
மறைத்துவிடுகிறேன்
என்னை பற்றி உன்னிடம்..!************************************************
நீ அறிவாயா..?
உன்னை
கடந்து போகும் காற்றில்
மூன்றில் ஒரு பங்கு
என் சுவாசம் என்பதை..!*****************************************************
நியாபகமாய்
கிழிக்கப்பட்ட
பக்கங்களில் எல்லாம்
எப்போதும் போல்
மறதியாய் அமர்ந்திருக்கிறது
உன் நினைவுகள்..!****************************************************
உனக்கு தெரியாது..!
பத்திரமாய் இருந்துக்கொள் என
நீ பிரிகையில்
சொல்லிச் செல்லும்
வார்த்தைகள் தான்
ஒவ்வொரு நாளும்
என்னை பத்திரப்படுத்திக் கொண்டிருக்கிறது என்ற விவரம்..!******************************************************************************************
உன்னை காதலித்து
உருகி உருகி
எழுதிய வார்த்தைகளால்
உச்சபட்சமாய் எனக்கென
மிஞ்சியிருந்தது
அழகாய் மாறியிருந்த
கையெழுத்தும் ..
கவியாய் மாற்றியமைத்த
தலைஎழுத்தும் தான்..!****************************************************************************
நீ தந்த ஒற்றை
மூச்சுக்காற்றில்
என் வாழ் நாள்
முழுமைக்குமான
சுவாசத்தை பெற்றுவிட்டேன்...! ******************************
என்னை பார்த்ததும்
மறைக்கும்
உன் சிகரெட்டை போலவே
உன்னை பார்க்கும் போதெல்லாம்
நானும் மறைக்கிறேன்
உன் மீதுள்ள ஆசையை.. ! ******************************
என்னைப்பற்றி
சொல்லும்
போதெல்லாம்
கண்டிப்பாய்
மறைத்துவிடுகிறேன்
என்னை பற்றி உன்னிடம்..!******************************
நீ அறிவாயா..?
உன்னை
கடந்து போகும் காற்றில்
மூன்றில் ஒரு பங்கு
என் சுவாசம் என்பதை..!******************************
நியாபகமாய்
கிழிக்கப்பட்ட
பக்கங்களில் எல்லாம்
எப்போதும் போல்
மறதியாய் அமர்ந்திருக்கிறது
உன் நினைவுகள்..!******************************
உனக்கு தெரியாது..!
பத்திரமாய் இருந்துக்கொள் என
நீ பிரிகையில்
சொல்லிச் செல்லும்
வார்த்தைகள் தான்
ஒவ்வொரு நாளும்
என்னை பத்திரப்படுத்திக் கொண்டிருக்கிறது என்ற விவரம்..!******************************
உன்னை காதலித்து
உருகி உருகி
எழுதிய வார்த்தைகளால்
உச்சபட்சமாய் எனக்கென
மிஞ்சியிருந்தது
அழகாய் மாறியிருந்த
கையெழுத்தும் ..
கவியாய் மாற்றியமைத்த
தலைஎழுத்தும் தான்..!******************************
semma cute :-)
பதிலளிநீக்கு