புதன், 19 அக்டோபர், 2011

மலருமா அந்த நாட்கள்....?

சிநேகமாய் புன்னகைத்து

உள்ளத்தில் சங்கமமாகிய நாட்கள்..

உனக்கென்ன காத்திருந்து

கைகோர்த்த பழகிய நாட்கள்..

மற்ற நிகழ்வுகள் மறந்து

உன் நினைவோடு

சுற்றி திரிந்த நாட்கள்..

முகம் தூக்கி பார்த்து

பரவசமடைந்த மழை நாட்கள்..

அத்தனை நாளுக்கும்

முற்றுப்புள்ளியாய் அமைந்ததடி..

நம் திருமண நாள் ....

ஏக்கங்கள் வளர ..

நியாபகங்கள் தொடர.

.மீண்டும் மலருமா அந்த நாட்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக