வியாழன், 20 அக்டோபர், 2011

சோதனை கூடத்தின் எலியானேன்..

வாளினும் வலியதாய்

உன் விழிகள் இருக்கலாம்..

அதனை பரீச்சித்து பார்க்க..

என் இதயம் தானா

கிடைத்தது உனக்கு..

தேனினும் இனியதாய்

உன் வார்த்தைகள் இருக்கலாம்.

கவிதை எழுதி பழக

என் வாழ்க்கை தானா

கிடைத்தது உனக்கு.
.
சோதனைக்கூடத்தின் எலியாய்

என் காதலை சிதைத்து விட்டு

யாரோடு மேடை ஏறினாய்

கல்யாண பட்டம் பெற..

1 கருத்து: