செவ்வாய், 18 அக்டோபர், 2011

கை விட்ட காதல்.....!



அன்று...!

கவிதை பூக்கள் தொடுக்க வைத்து

இன்று கண்ணீர் பூக்களை

பரிசாய் கொடுத்தவளே..

காதல் எனும் அகராதிக்கே

புது களங்கம் கர்ப்பித்தவளே..

எவரும் புரிந்திடா வண்ணம்

காதலை..

புதுமையாய் காய படுத்தியவளே..

உலகையே காக்கும் காதல்..!

என்னை மட்டும் கைவிட்டதே...

ஒரு வார்த்தை...

முன்பே கூறி இருந்தால்

மனமுவந்து தாரை வார்த்திருப்பேனடி

என் உயிரை ..


அதை விடுத்து

எனை உயிரோடு கொல்ல

காதல் எனும் ஆயுதம் தானா கிடைத்தது

உனக்கு.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக