செவ்வாய், 18 அக்டோபர், 2011

அதுவும் ஒரு பாடம்

..
அது ஒரு

இருவழி நெடுஞ்சாலை...

வாகனங்கள் முந்திக்கொண்டும்

உரசிக்கொண்டும் போகிறது..

தவறி விழுந்த படி கிடக்கும்

நாயாகட்டும்..,

மனிதனாகட்டும்..,

யாருக்கும் நின்று பார்க்க நேரமில்லை

நிற்பதற்கு மனமில்லை ...

எந்த வாகனமும் பொருட்டில்லை

கனரக வாகனத்திற்கு...

.கனரக வாகனத்தையும்

முந்தி செல்ல

அவசரம் காட்டுகிறது

இரு சக்கர வாகனம்...

அவசரம் காட்டுபவர்கள்

எல்லோரையும்

ஓரிடத்தில்

சற்று நிக்க வைத்து விட்டே செல்கிறது...

பொறுமையாய்

ஒரு மாட்டு வண்டி

முன்னே.. !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக