செவ்வாய், 18 அக்டோபர், 2011

ஜனநாயக தேசத்தில் நாம்..

கவிதை தலைப்பு: ஜனநாயக தேசத்தில் நாம்..

பூனைக்கு ஞானம்

வந்தது அறியாமலே..

சந்தேக எலிகளாய்.....

கிடைக்குமோ,கிடைக்காதோ

என அலைகின்றோம்.....

உரிமைகளை பெற

பிறந்த நாட்டில்......

முன் தினம் பெற்ற

செஞ்சோற்று கடனக்கு

வாழ்வையே அடகு வைக்கிறோம்

எதோ ஒரு

அரசியல் கட்சி வாழ...

பெருமைக்காக நாயை

காரில் வைத்து பவனி வருகிறோம்..

சாவுக்கு போராடும் மனிதனை

சாலையிலே விட்டு செல்கிறோம்

சட்ட பிரச்சனைக்கு பயந்து..

நோயால் முடியாத

மரணத்தை எல்லாம்..

நமக்கு தந்து கொண்டிருக்கிறது

மருந்துகள் தன் பங்கிற்கு..

பொருளை தேடி..

மக்களோடு மக்களாய்..

நாம் அலைய

நம் மழலைகளுக்கு

மனிதத்தை சொல்லித்தருகிறது..

விலங்கின் வடிவில் கார்டூன்கள்.. ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக