வியாழன், 20 அக்டோபர், 2011

வல்லமை தாராயோ.....!

உலகத்தின் காதலை

எல்லாம் உள்ளத்தில்

சேமித்தேன் உனக்கென..!

புரியாத மொழியை

எல்லாம் அறிந்து கொண்டேன்

புதுமுறையில் காதலை சொல்வதற்கென...!

ஓளி தருவாய் எனும் நம்பிக்கையில்

வழிப்பாதையில் நிற்கிறேன்....

நீ வருவாய் என.. .!

எல்லாம் சரியாய் செய்தும்

எப்போதும் போல்

எதிரில் நிற்க மலைக்கிறேன்....!

.இன்று வரை

உன் விழிப்பார்வை

எதிர் நோக்கும்

வல்லமை இல்லாமல்.....! .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக