அன்று.. !
நிலவுக்கும் எனக்குமான தூரத்தை
நீ தான் குறைத்தாய்
உன் வருகையால்.. ..!
தொடக்கத்திற்கும்
முடிவிற்குமான என் வாழ்வை
நீ தான் கணக்கிட்டாய்..
உன் காதலால்....!
உணர்வுக்கும் உள்ளத்திற்கும்
புரியாததொரு துடிப்பை கொடுத்தாய்
உன் கண்களால்...!
இன்று..!
என் உடலுக்கும்
உயிருக்குமான தொடர்பை
நீ தான் துண்டிக்கிறாய்..
உன் பிரிவால்.. !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக